600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது !
குஜராத் கடற்கரையில் சுமார் 86 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த நடவடிக்கையில், சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான 86 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.